புது தில்லி, ஜூன் 10: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் திகார் சிறையில் உள்ள கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் ஆகியோர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்தனர்.
தில்லி சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கனிமொழியின் ஜாமீன் மனு திங்கள்கிழமை (ஜூன் 13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
இந் நிலையில் மூத்த வழக்கறிஞர் அல்டாப் அகமத் சிறப்பு நீதிமன்றத்துக்கு நேரில் வந்து கனிமொழி, சரத்குமார் ஆகியோருடன் ஜாமீன் மனு விவரங்கள் குறித்து சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.







0 கருத்துரைகள்:
Post a Comment