ஆமதாபாத், ஜூன்.9: குஜராத்தில் டோல்கா-பகோத்ரா நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி ஏறியதில் 20 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பஹ்தியாதில் உள்ள தர்கா ஒன்றுக்கு நடைபயணமாகச் சென்ற பக்தர்கள் டோல்கா-பகோத்ரா நெடுஞ்சாலையில் பேஜ்வா சந்திப்பு அருகே சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாக சென்ற லாரி அவர்கள் மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஆமதாபாத் வி.எஸ்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






0 கருத்துரைகள்:
Post a Comment