காவித் தீவிரவாதம்-பாபா ராம்தேவ் மீது திக் விஜய் சிங் குற்றசாட்டு

பாபா ராம்தேவ் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், யோகா குரு பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது 5 நட்சத்திர சத்தியாகிரகம் போல் உள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காவித் தீவிரவாதத்தில் இருந்து மக்களின் கவனத்தை திருப்ப, ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி ஆதரவுடன் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது என்று திக் விஜய் சிங் கூறினார்.

இத்தகைய போராட்டத்தை ஊக்கப்படுத்துவதன் மூலம் ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்புகள், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை இல்லாமலாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஐந்து நட்சத்திர வசதிகளுடன் அவருக்கு உண்ணாவிரத அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஜெட் விமானத்தில் பறக்கும் பாபா ராம்தேவ் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் எந்தவகையான சத்தியாகிரகம் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியது திக் விஜய்சிங், காவித் தீவிரவாதத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி.யால் திட்டமிடப்பட்டதே இந்த உண்ணாவிரதம் என்றும் திக்விஜய் சிங் கூறினார்.

ராம்தேவ் மூலமாக மத்தியில் காவி ஆட்சியைக் கொண்டு வர சதி நடக்கிறது-கி.வீரமணி

சென்னை: ஊழலை ஒழிப்பதாக கூறி போராட்டங்கள் நடத்தி ராம்தேவ் போன்றவர்கள் மூலமாக மத்தியில் காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வர சதித் திட்டம் தீட்டப்படுகிறது. இதைக் கூட புரிந்து கொள்ளாமல் இந்த காவிகளின் மிரட்டல்களுக்கு மத்திய அரசு பணிகிறது என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

ஊழலுக்காக போராட்டம் நடத்தி உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹஸாரேவையும் கூட மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் கி.வீரமணி. தற்போது ராம் தேவின் போராட்டத்தையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

ஊழலை ஒழிக்கிறோம்’ என்ற புதிய முகமூடியுடன் இந்துத்துவா மதவாதி சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை தலைநகர் டெல்லியில் அரங்கேற்றுகின்றன. சுமார் 18 கோடி ரூபாய் செலவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மின்விசிறிகள், மேடைகள் முதலிய தடபுடல் ஏற்பாடுகள்.

அண்மைக் காலத்தில் உடற்பயிற்சிகளில் ஒன்றான மூச்சுப் பயிற்சியான யோகா வித்தைகளைப் பரப்பி, பல நவீனரக பாபாக்களும், காவிகளும் ஆண்டவன் ‘அவதாரங்களும்’, தத்துவார்த்த மழைபொழியும் நடிகர்களைத் தோற்கக் கூடிய ஒப்பனைக் குருமார்களும் புற்றீசல் போல கிளம்பி வருகின்றனர்!

தொலைக்காட்சி ஊடகங்கள், ஏடுகள் இவற்றுக்கு அபார விளம்பரங்கள் தருவதோடு, இப்படி இரட்டை வேடதாரிகள் “தூய யோவான்களாகவும் சித்திரித்து, படித்த பாமரர்களையும் ஏமாற்றிடத் துணை போகின்றன!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிற்படுத்தப்பட்டவர் திடீரென யோகா பயிற்சியில் முன்னணிக்கு வந்து, பாபா ராம்தேவ் ஆகி, பல அரசியல் தலைவர்கள் ஆதரவை ஆரம்பத்தில் பெற்று, பிறகு வெளிநாட்டுப் பணக்காரர்களையும் சீடர்களாக்கி, உலகப் பணக்கார ஆசிரமங்களையொத்த ராஜபோகத்தை எளிமை வாழ்வு எனக் கூறி நடத்துகின்றனர்!

அரசியலைத் தூய்மைப்படுத்தும் முன்பு இவர்கள் சார்ந்த ஆன்மீகம், மதங்களில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, மோசடிகளைத் தடுத்து நிறுத்த முதலில் உழைக்க வேண்டாமா?

அப்பாவி மக்களைக் கவருவதற்காக கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை கொண்டு வருதல் போன்ற பல்வேறு திட்டங்களை முன் வைத்து மத்திய அரசாங்கத்தை “பயமுறுத்திட” இப்படி ஒரு உண்ணாவிரத நாடகத்தைத் துவக்கி, ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதால் நடத்திட முன் வந்துள்ளனர்; பாபா ராமதேவ், அன்னாஹசாரே போன்றவர்கள் புதிய அவதாரங்கள்!

மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி குறிப்பாக காங்கிரஸ் தலைமையில் உள்ள ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க. காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வரவே இப்படிப்பட்ட திடீர் ஊழல் ஒழிப்பு திடீர்க் காட்சிகள்!

டில்லியில் இதில் அரசியல்வாதிகள் மேடையில் இருக்க அமைதிக்கப்பட மாட்டார்களாம்! மாறாகக் கலந்து கொள்பவர்கள் யார் யார் தெரியுமா?

1.விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால்.
2. சாத்வி ரிதம்பரா
3. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர்
4. இந்து அமைப்புகள்

இதில் அசோக் சிங்கால், சாத்வி ரிதம்பரா போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள்; ஜளிடீளி லிபரான் கமிஷன் என்ற அறிக்கையை காங்கிரளி கட்சி செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதே! அதிலும் அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கிலும் இவர்கள் எல்லாம் உள்ளனர்!

இதை அய்க்கிய முற்போக்கு முன்னணி ஆட்சித் தலைமை, பிரதமர், அமைச்சர்கள் எவருமா புரிந்து கொள்ளவில்லை?

ஊழலை ஒழிக்க தயங்காது என்று கூறும் மத்திய அரசு தலைமை, இந்த சாமியார்களிடம் ஏன் கெஞ்ச வேண்டும் அமைச்சர்களை தூது அனுப்பி இதை நிறுத்திடும்படிக் கெஞ்சுதல், கொஞ்சுதல் செய்ய வேண்டும்? அவ்வளவு பலவீனமான அரசாக இயங்குவது நல்லதா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இதனைக் கூறி சட்டங்களைக் கொண்டு வருவதே அரசியல் சட்டப்படிக்கு உள்ள கடமையாகும்.

அதைவிடுத்து, மிரட்டுகிறவர்களைச் சேர்த்து புதுக்கமிட்டி போட்டு, சட்டத்தைத் தயாரிப்போம் என்று கூறும் மத்திய அரசின் செய்கை, அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஏன் முரண்பட்ட நடவடிக்கை அல்லவா?

அது மட்டுமல்ல, “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என்பதுபோல பாபா ராம்தேவ் உண்ணாவிரத கோரிக்கைகளில் ஒன்று தற்போது ஆட்சியில் உள்ள ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு, இந்தியையே நாட்டு நிருவாகத்தில் முழுக்க முழுக்க பயன்படுத்தவும் வேண்டுமாம்! அது ஒரு முக்கிய பாபா திட்டம்! புரிந்து கொண்டீர்களா?

இது முழுக்க காவியமயமாக்கும், மத்திய ஆட்சிக்கு எதிரான திட்டமிட்ட மறைமுக முயற்சி. இதற்குப் போய் “மயிலே மயிலே இறகு போடு” என்று கூறி அவர்களுக்குப்பின் ஓடலாமா? காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு திக் விஜய்சிங் தான் இதனை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார் என்பது சற்று ஆறுதல்!

பாபா ராம்தேவ்வை ஒரு வியாபாரி என்று நன்றாக வர்ணித்து அறிக்கை கொடுத்ததோடு, அவரை நோக்கி அமைச்சர்களை அனுப்புவது ஏன் என்று கேட்டுள்ளார் திக் விஜய்சிங். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியவர்களுக்குத் தெரியாமலா இந்த இரண்டு அணுகுமுறைகள்?

ஒருபுறம் பேச்சு வார்த்தை காவிகளிடம்; இன்னொருபுறம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் அறிக்கை ஒன்றுமே புரியவில்லை நாட்டினருக்கு!

இந்த அரசியல் அலங்கோலங்கள்பற்றி நினைத்தால் ஜனநாயகம் இப்படி கேலிக் கூத்தாக்கப்படுகிறதே என்று எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது!

மீண்டும் காவிகள் அரியணை ஏறவே இந்த ஆயத்தங்கள் என்பதை புரிய வைக்க வேண்டியது முற்போக்குச் சிந்தனை உடைய தலைவர்களின் கடமையாகும் என்று அவர் கூறியுள்ளார்.

25 வயதுக்கு கீழ் மது அருந்தினால் அபராதம்

மராட்டியத்தில் தற்போது 21 வயதிலிருந்து மது பானங்கள் வாங்க, குடிக்க சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. இந்த நிலையில், மராட்டியத்தில் மது அடிமைக்கு எதிராக மாநில அரசு புதிதாக கொள்கை ஒன்றை கொண்டு வர உள்ளது.

இது தொடர்பாக மாநில மந்திரிசபை கூட்டம் முதல் அமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தலைமையில் மும்பையில் நடந்தது.

இந்த கூட்டத்தில், 25 வயதுக்குட்பட்டோர் மது பானம் வாங்குவதும், குடிப்பதும் சட்டவிரோதமான குற்றம் என்னும் அரசின் புதிய முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் பீர் வாங்குவதற்கும், பருகுவதற்கும் வயது வரம்பு 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொது விழாக்களில், நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாறவும் அரசு தடை விதித்து விட்டது. இனி 25 வயதுக்குட்பட்டோர் மராட்டியத்தில் மதுபானங்கள் பருகினால் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் கல்வி நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், நெடுஞ்சாலைகளுக்கு ஒரு கி.மீ. தொலைவில் மதுக்கடைகள் இருக்க அனுமதி இல்லை. ஒரு மாநகராட்சி வார்டு பகுதியில் மதுக்கடையை மூடுமாறு அதில் குடியிருப்போரில் 25 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மூடிவிட வேண்டும்.

தனி நபர் வாங்குகிற மது பாட்டில்களின் அளவுக்கும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

மதுபானங்கள் வாங்குவதற்கும், பருகுவதற்கும் 25 வயது ஆகி இருக்க வேண்டும் என்ற வரம்பு டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் அமலில் உள்ளது. இப்போது மராட்டியமும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









பலஸ்தீன் ஆசிரியையை எரித்துக் கொல்லமுயன்ற யூத ஆக்கிரமிப்பாளர்கள்


கடந்த புதன்கிழமை (01.06.2011) ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் பலஸ்தீன் ஆசிரியை ஒருவரை வழிமறித்த யூத ஆக்கிரமிப்பாளர்கள் குழுவொன்று அவரைத் தாறுமாறாகத் தாக்கிக் கொல்ல முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஊனமுற்ற குழந்தைகளுக்கான பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் நூர் அல் ஹுஸைனி. தன்னுடைய பணியிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஆண்களும் பெண்களுமாய் யூத ஆக்கிரமிப்பாளர் குழுவொன்று அவரை வழிமறித்தது. சிலர் அவரது ஹிஜாபை இழுத்தனர். மற்றும் சிலர் கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி அவரைத் தாறுமாறாகத் தாக்கினர். இன்னும் சிலர் அவரைக் காட்டுமிராண்டித்தனமாகக் கீழே தள்ளி பூட்ஸ் கால்களால் மிதித்து, எரித்துக் கொல்ல முயன்றுள்ளனர்.

அத்தெருவில் சென்று கொண்டிருந்த பலஸ்தீனர்கள் சிலர் இதனைக் கண்ணுற்று நடைபெற இருந்த அசம்பாவிதத்தில் இருந்து அந்தப் பலஸ்தீன் பெண்மணியைக் காப்பாற்றி உள்ளனர்.

இந்தச் சம்பவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் பெரும் பதட்டம் நிலவியது.

அண்மைக் காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரை யூத மயப்படுத்தும் செயற்திட்டங்கள் பகிரங்கமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், பலஸ்தீனர்கள் மீதான தொடர் கைது நடவடிக்கைகள், யூதக் குடியிருப்புக்களை அதிகரித்தல், பாரம்பரியமாக ஜெரூசலத்தில் வாழ்ந்துவரும் பலஸ்தீனர்களுக்கு மாநகர சபையால் வழங்கப்படக்கூடிய கீழ்க்கட்டுமான வசதிகளை வழங்க மறுத்தல், அவர்களை நகரில் இருந்து வெளியேற்றுதல், அவர்களின் இருப்பிடங்களைத் தகர்த்தல், இஸ்ரேலியப் பிரிவினைச் சுவர் மூலம் ஜெரூசல நகரத்துடன் அதனைச் சுற்றியுள்ள பலஸ்தீன் கிராமங்கள் கொண்டுள்ள தொடர்பை முற்றாகத் துண்டித்தல் முதலான நடைமுறைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆக்கிரமிப்பு அதிகார சபையின் இத்தகைய இனத் துவேஷ நடவடிக்கைகளாலும், 'ஒருங்கிணைக்கப்பட்ட ஜெரூசலமே யூத தேசத்தின் தலைநகராய் அமைதல் வேண்டும்' எனும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் அண்மைய பிரகடனத்தினாலும் துணிவு பெற்றுள்ள யூத ஆக்கிரமிப்பாளர்கள், உள்ளூர் மக்களான பலஸ்தீனர்கள் மீது நாள்தோறும் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளும் அட்டகாசங்களும் அளவுகடந்த நிலையில் உள்ளன என ஜெரூசல நகரில் வாழும் பலஸ்தீனர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


யூத ஆக்கிரமிப்பாளர் குழுக்கள் பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தும் சந்தர்ப்பங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையும் ஆக்கிரமிப்புக் காவல்துறையும் அவற்றைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவதோடு, தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காகப் பலஸ்தீனர்கள் எதிர்த்தாக்குதல்கள் நடாத்தும் பட்சத்தில் அவர்களைக் கைதுசெய்யவும் தயங்குவதில்லை. இதனால், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் அடிக்கடி மோதல்கள் வெடித்தபடி உள்ளன என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SDPI சார்பாக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த மாணவனுக்கு வாழ்த்து



பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மேலாபாளையம் முஸ்லிம் மேல் நிலை பள்ளி மாணவன் சதாம் ஹுசைன் க்கு SDPI சார்பாக பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது .நம்முடைய பரிசுகளும் பாராட்டுகளும் மாணவனை மிகவும் உற்சாக படுத்தியது .மேலும் மாணவனின் குடும்பதினரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் .இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி , மாவட்ட பொது செயலாளர் ஹபீப் முஹமது , மாவட்ட செயலாளர் ஹயாத் முஹமது , பாளை தொகுதி தலைவர் பிஸ்மி காஜா , நாங்குநேரி தொகுதி தலைவர் ஜாகிர் ஹுசைன் போன்றோர் கலந்து கொண்டு மாணவனை வாழ்த்தினர் .

அஸ்ஸாம்:ரிஹாப் மறுவாழ்வு கிராமம் திறப்பு…


புதுடெல்லி:அஸ்ஸாம் மாநிலத்தில் வீடு இல்லாத ஏழை மக்களுக்காக ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் மறுவாழ்வு கிராமம் திறக்கப்பட்டது. மே மாதம் 29-ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் நஸன்குரியில் நடந்த நிகழ்ச்சியில் கிராமத்தின் திறப்பு விழா நடந்தேறியது.

அருகிலுள்ள கிராமங்களில் வாழும் வீடு இல்லாத 45 ஏழை குடும்பங்களுக்கு இந்நிகழ்ச்சியில் வீட்டிற்கான சாவி ஒப்படைக்கப்பட்டது.வீடுகளை இழந்த இந்த குடும்பங்கள் பல வருடங்களாக சாலையோரத்திலும், அகதிகள் முகாமிலும் வாழ்ந்துவருபவர்களாவர்.

1000 குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதுதான் இத்திட்டம். இதில் 51 வீடுகளின் நிர்மாணம் பூர்த்தியாகிவிட்டது.இத்திட்டத்திற்கு தேவையான அனைத்து நிலமும் வாங்கப்பட்டுவிட்டது.வீடுகள் தவிர கல்வி நிலையம் மற்றும் மஸ்ஜிதும் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

திறப்பு விழா நிகழ்ச்சியில் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் தலைவர் இ.அபூபக்கர் வீடுகளுக்கான சாவிகளை உரியவர்களுக்கு வழங்கினார். ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் பொது செயலாளர் கெ.எம்.அஷ்ரஃப் அமைப்பின் செயல்பாடுகளை விவரித்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், பொன்கய்காவ் மாவட்ட கூடுதல் கலெக்டர் அப்துற்றஹீம் ஷேக், ரிஹாப் அறங்காவலரும்(trustee) மில்லி கஸட் பத்திரிகையின் ஆசிரியருமான டாக்டர் ஷஃபருல் இஸ்லாம் கான் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

2010 ஆண்டு முதல் 1200 பலஸ்தீன் சிறுவர்கள் கைது


அண்மைக் காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ஸில்வான், அல் இஸாவிய்யா பிரதேசங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவல்துறைக்கும் ஜெரூசலவாசிகளான பலஸ்தீனர்களுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்து வருவதாக கடந்த செவ்வாய்க்கிழமை (31.05.2011) மனித உரிமை அமைப்பொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரை சுமார் 1200 பலஸ்தீன் சிறுவர்கள் காவல்துறைமீது கற்களை எறிந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 760 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு, ஏனையோர் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கைகள் பலஸ்தீன் இளந் தலைமுறையினரை அச்சுறுத்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது என அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு எந்தவித முகாந்திரமும் இன்றி அல் இஸாவிய்யா பிரதேசத்தில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவல்துறையினர், அங்கு உள்ள பலஸ்தீன் குடியிருப்பை நோக்கி தொடர்ச்சியாக வீசிய கண்ணீர்ப் புகைக் குண்டுகளினால் மூச்சுத்திணறி ஒரு சிறு குழந்தை பரிதாபகரமாகச் செத்துப் போனதையடுத்து, இப்பிரதேசத்தில் வாழும் ஜெரூசலவாசிகளுக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவல்துறைக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டவண்ணம் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் போர்வையில் ஜெரூசலவாசிகளான பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவல்துறையினர் கட்டவிழ்த்துவிடும் எல்லைமீறிய ஒடுக்குமுறைகள், வன்முறைகள் என்பவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன் பொதுமக்கள், அவை குறித்து எத்தனையோ முறைப்பாடுகளை முன்வைத்தும் அவற்றில் எந்த ஒன்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் கண்டுகொள்ளப்படவில்லை என்றும், இதனால் விரக்தியடைந்த நிலையில் இருக்கும் மக்கள், ஆக்கிரமிப்பாளர்களின் அராஜகங்களை எதிர்த்துக் கொதித்தெழும் நிலை தோன்றியுள்ளதாகவும் மேற்படி மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும்! SDPI !!

பெங்களூரு: SDPI கட்சியின் புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய உரை.

SDPI அமைத்திருக்கும் இந்த அரசியல் தளம் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் உட்பட நாட்டில் வாழும் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் அளவிற்கு விசாலமானது.

புதிய பூகோளத்தை வடிவமைத்திருக்கிறோம் அதற்கு எல்லைகள் உண்டு. இந்த பூகோள எல்லையில் ஹிந்துக்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சீக்கள், ஆதிவாசிகள், தலித்துகள், மற்றும் பிற இந்தியர்களுக்கு உரிய பிரதிந்தித்துவம் உண்டு.

வரையறுக்கப்பட்ட இந்த புதிய பூகோளத்தில் புதிய சரித்திரம் படைக்கவிருக்கிறோம்.

இந்த புதிய சரித்திரம் படைக்க நமது கட்டமைப்பை மீளாய்வு செய்வதும் அவசியம். இந்த புதிய சிறிய கட்சி 21 மாநிலங்களில் செயல்வீரர்களைக் கொண்டுள்ளது.

11 மாநிலங்களில் மாநில அளவிலான கமிட்டிகளைக்கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது பெருமை படத்தக்கது. நமது இலக்கு ஒரு வருடத்தில் 200000 செயல்வீரர்களைச் சேர்ப்பது. இந்த இலக்கை நாம் அடையவில்லை மிக மெத்தனமான போக்கை கடைபிடித்துள்ளோம்.

இந்த 21 ஆம் நூற்றாண்டிற்கான நவீன அரசியல் தொலைநோக்குப் பார்வையுடன் நாம் உருவெடுத்துள்ளோம். இது தொடர்பாக எந்த முன்மாதிரியும் நமக்கில்லை. இந்த புதிய சிந்தனைக்கு நாமே முன்னோடி.

புதிய உலகில் போராட்ட களத்தை மட்டுமே நாம் கொண்டிருக்கிறோம். அரசியலின் கிழிந்த பக்கத்திலிருந்து நாம் காப்பியடிப்பதில்லை. சுத்தமான கரும்பலகையில் முதல் எழுத்தை எழுததயராயிருக்கிறோம்.

இந்த கட்சி தனிநபர் துதிபாடும் கட்சியல்ல. தனிநபர் இங்கு முக்கியமல்ல. தலைமையேற்று வழிநடத்தும் பண்புதான் இங்கு மிக முக்கியம். நம்மிடையே தேர்ந்தெடுக்கும்போது நாட்டின் வருங்கால தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நமக்கு சவாலாக, நமக்கெதிராக பலர் திரும்பியுள்ளனர், மதச்சார்பின்மை மற்றும் போலி மதச்சார்பின்மை பேசுவோர், தலித்து ஆளும் வர்க்கம் இதுபோன்று முஸ்லிம் கட்சிகளும் நமக்கெதிராக திரும்பியுள்ளனர். பாஜகவும், கம்யூனிஸ்டுகளும் நமக்கு எதிராக உள்ளனர்.

ஒரு சிறிய சம்பவத்தை சாக்காக வைத்து கொண்டு SDPI கட்சியின் 100 க்கும் மேற்பட்ட அலுவலங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நமது தலைவர்கள் மிரட்டப்பட்டனர். RSS போன்ற வகுப்புவாத சக்திகளால் நமது செயல் வீரர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் நான் சத்தியமிட்டு சொல்கிறேன் நம் இயக்கத்தை எவராலும் தடுக்க முடியாது.

நண்பர்களே, இந்த அரசியல் கட்சிக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் என்று ஆச்சர்யப்படலாம். காரணம் மிக எளிமையானது. மற்ற பிற அரசியல் கட்சிகள் சிறியதோ அல்லது பெரியதோ இடதுசாரியோ அல்லது வலதுசாரியோ அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்தன்மையுடன் உருவானது தான் சோசியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியா.

ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும் திராணியுள்ள பச்சைக்குழந்தையின் வெள்ளை மனதுடன்,”அதுவல்ல, இது தான் பாதை” என்று சுட்டிக்காட்டும் கட்சி இது. இதுபோன்ற குணநலங்கள் உள்ளவர்கள் வரலாறு நெடுகிலும் எதிர்ப்பையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்துள்ளனர். வரலாறும் இவர்களுக்குத்தான் சொந்தம்.

அடிமைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சமுதாயங்களின் இளைஞர்களின் கோபாவேசத்தை அளவிட தெரியாதவர்கள் அரசியல் உருவாக்கத்தை நம்ப மறுக்கிறவர்களிடமிருந்து எதிர்ப்பு வரத்தான் செய்யும். அவர்களை நாம் உதாசினம் செய்யலாம் அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

இதற்காக நீங்கள் தயாராக இருங்கள் நாங்களும் தயாராகவே இருக்கிறோம். எஸ்டிபிஐ வெறும் அரசியல் கட்சியல்ல. இது ஒரு மிஷன். மக்களின் ஆழ்ந்த துயரத்திற்கு மத்தியில் அவர்களின் உள்ளக்கிடக்கையின் மனசாட்சியின் வெளிப்பாடு இது. இதுபோன்ற இயக்கங்கள் தான் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்.

நான் ஏற்கெனவே கூறியுள்ளது போல நமது நாட்டிற்காக புதிய வரலாறு படைக்க புதிய பூகோளத்தை வரையறுத்திருக்கிறோம். நாம் இதில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நிகழ்காலத்தின் அர்பணிப்பு ஒளிமயமான எதிர்காலத்திற்காக.

இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் : தென்காசி கருத்தரங்கம்

இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் எங்கின்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் தென்காசியில் மே 29 அன்று விடிஎஸ்ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது. சுமார் 500 பேருக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று பயனடைந்துள்ளனர்.

நம்மை சீரமைப்போம் என்கிற தலைப்பில் ஜாஃபர் அலி உஸ்மானி அவர்கள் தனி மனித ஒழுக்கத்தின் அவசியம் குறித்தும் அவை செம்மையாக சீராக பேணப்படாமல் விட்டுவிடப்பட்டால் சீரழிந்து போய்விடும் என்பதை தக்க உதாரணத்துடன் விளக்கினார். ஒரு விவசாய நிலம் முறையாக உழுது களையெடுக்கப்பட்டு நீர் பாசனத்தை சரியான தருணத்தில் பாய்ச்சி கண்ணும் கருத்துமாக உரமிட்டு பயிரிட்டு அருவடை செய்தால் தான் அந்த விவசாயிக்கு எதிர்பார்த்த பலனைத்தரும் அதே போல குழந்தைகளையும் சீரும் சிறப்புமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அடுத்து பேசிய ஹாஜா இமாம் சமூகத்தை சீரமைப்போம் என்ற தலைப்பில் பேசினார். இந்தியாவில் தலித்துகளும் பெண்கள் சமூகமும் அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் கொடுமைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்று புள்ளிவிபரங்களுடன் சுட்டி காட்டினார். முஸ்லிம் சமூகமும் பல்வேறு ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுவதையும் விவரித்தார். ஒரு தீமை நடைபெறக்கண்டால் கரங்களால் தடுக்க வேண்டும் அல்லது மிக மிக குறைந்த பட்சம் மனதால் வெறுக்க வேண்டும் அவரே நம்பிக்கையில் குறைந்த தரத்தில் உள்ளவர் என்ற நபிமொழியை சுட்டிக்காட்டி இறைத்தூதர் அவர்கள் தீமையை தடுப்பதை இறைநம்பிக்கையோடு தொடர்பு படுத்தி சொன்னதை விளக்கினார். முஸ்லிம் சமூகத்தைப் போலவே பல்வேறு சமுதாயங்கள் பாதிப்புள்ளாக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் அந்நிய முதலாளிகளிடம் தாரைவார்க்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நாட்டில் ஊழல் லஞ்சம் கொலை கற்பழிப்பு போன்ற குற்றங்கள் பெருகியுள்ளது. இது போன்ற குற்றங்களை தடுக்கவேண்டும். அவ்வாறு தடுப்பதற்கான முழு பொறுப்பும் முஸ்லிம் சமுதாயமான நம்மிடத்தில்தான் உள்ளது. நீங்கள்தான் சிறந்த சமூகம் ஏனெனில் நீங்கள்தான் நன்மையை ஏவி தீமையை தடுக்கிறீர்கள் என்று குர்ஆனிலிருந்து வசனங்களை கோடிட்டு காட்டி பேசினார். எனவே சமூகத்தை புனரமைப்பது நமது கடமை என்று குறிப்பிட்டார்.

இறுதியாக சிறப்புப் பேருறையாற்றிய சோசியல் டெமாக்ரடிப் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் செய்யது இபுறாஹிம் அவர்கள் குடும்பத்தை புனரமைப்போம் என்ற தலைப்பில் சிந்தனையைத்தூண்டும் விதத்தில் அனைவருக்கும் எளிமையாக விளங்கும் வகையில் பேசினார்.

மேற்கத்திய கலாச்சாரத்தில் குடும்ப அமைப்புமுறை சீரழிந்து போய்விட்டது. அமெரிக்கா சந்தித்த மிகப்பெரிய சரிசெய்ய முடியாத பாதிப்பு இது என்பதை தக்க உதாரணத்துடன் விளக்கினார். அமெரிக்க மக்கள் வாழ்க்கை முறையில் குடும்ப அமைப்பு முறை இல்லாத காரணத்தால் தறுதலையான அநாதையான குழந்தைகள் ஏராளமாக உருவாக்கப்பட்டு அவை மன உழைச்சலுக்குள்ளாகி பல துப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொன்று வருகிறது என்பதை பத்திரிக்கை செய்தி வாயிலாக அறிய முடிகிறது.
குடும்பம் என்பது ஒரு பல்கலைக்கழகமாக திகழவேண்டும். குடும்பம் என்பது ஒரு கல்விச்சாலையாக, கலாச்சார மையமாக, நிவாரண மையமாக, பாதுகாப்பு மையமாக, புத்துயிரூட்டும் மையமாக திகழவேண்டும் என்று குறிப்பிட்டார்.

குழந்தைகளிடம் இருக்கும் சில பிரச்சினைகள் பற்றி குழந்தை நல அல்லது மனோதத்துவ நிபுணரிடம் அலோசனை பெற நாம் சென்றால் அவர்கள் பெற்றோர்களிடம் சொல்லும் ஆலோசனைகளில் ஒன்று குழந்தைகள் முன்னிலையில் கணவன் மனைவி ஆகிய இருவரும் ஒருபோதும் சண்டையிட்டுக்கொள்ளாதீர்கள் என்பது தான். கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டு சண்டையிட்டுக்கொள்வதால் அவை பிஞ்சு மனதில் நஞ்சாக பதிவாகிறது. நாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதை விட அவர்கள் நம்முடைய நடவடிக்கைகளை கவனித்து நிறைய கற்றுக்கொள்கிறார்கள். எனவே வீட்டின் சூழலை கல்வி கற்கும் கலாச்சாலையாக செம்மையானதாக மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்.

கலாச்சாரத்திற்கு ஒரு உதாரணமாக உடைக்கலாச்சாரத்தை எடுத்துகொண்டு குழந்தைகளிடம் எவ்வாறு அது மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கினார். சிறு வயதில் சுமார் மூன்று வயது குழந்தைக்கு நவீன கலாச்சாரம் என்ற பெயரில் அரைகுறை ஆடையை அணிவிக்கிறோம். இது சிறு குழந்தை தானே அதில் எந்த தவறும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். என்றாலும் அந்த ஆடை அணிந்தபோது அனைவரின் பாராட்டையும் பெற்ற இக்குழந்தை வளர்ந்து விட்ட பிறகு கண்ணியமான ஆடை அணியும்போது பிற ஆண்களால் தான் கவரப்படவில்லை என்பதை உணரும்போது கவலையடைகிறாள். ஆழ்மனதில் பதிந்த பிறரை கவர்ந்து பாரட்டுப்பெற வேண்டும் என்ற உணர்வுதான் மிகைக்கும் இதனால் கண்ணியமான ஆடை, முடிவெடுக்கத்தெரியாத விடலைப்பருவத்தில் இவர்களின் வெறுப்புக்கு உள்ளாகிறது. எனவே சிறு குழந்தைப்பருவம் முதற்கொண்டு நமது குடும்பம் ஒரு கலாச்சார மையமாக திகழுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

நிகழ்ச்சியை புதிய தேசம் இணையதள பத்திரிக்கை ஆசிரியர் காதிர் அலி அவர்கள் தொகுத்து வளங்கினார். நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஜாஃபர் அலி உஸ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More