அடிப்படை தகவல்

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்
மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும்,அவர்கள் தங்கள் தலை முக்காட்டைத் தாழ்த்திக்கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள்(யாரென)அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்கஇது சுலபமான வழியாகும். (33:59)இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக!அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ளவேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்றும் தெரியவேண்டியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால்மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (24:31

ரமழானின் சிறப்புகள்

asslaamu alaikum
ரமழானில் அல்லாஹ்aவுக்காக, அவனது கூலியை நாடி,உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள்மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின்முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின்சிறப்பான “லைலத்துல் கத்ர்” இரவை பெற்றவரின்முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்)நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி)நூல்:புகாரி, முஸ்லிம்நோன்பாளி செய்யக் கூடாதவைஎவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும்,விடவில்லையோ அவன் உண்ணாமல்பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும்இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரிநீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப்பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது.அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிடமுற்பட்டால் “நான் நோன்பாளி” என்றுகூறி விடவும். நபி (ஸல்) அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்நோன்பின் தற்காலிக சலுகைகள்நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப்பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில்அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185)எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில்(விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில்நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்டதொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்றகூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது.அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில்இருக்கும்போது நோன்பு நோற்கஎனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்புநோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான்கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கியசலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப்பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான்.நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில்குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்:ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைநபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான்கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி)நூல்:அபூதாவூது, திர்மிதீநபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தபோது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும்வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக்கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான்பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி)நூல்:அபூதாவூதுநோன்பு நோற்றிருப்பவர் தான்நோன்பாளி என்பதை மறந்த நிலையில்உண்ணவோ பருகவோ செய்து விட்டால்(நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்)மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும்,ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும்செய்திருக்கின்றான். நபி (ஸல்)அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்சஹர் செய்தல்நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்:அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள்அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும்என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீநாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்:அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர்உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில்எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன்.அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள்ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது எனவிடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித்(ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்நோன்பு திறப்பதுஅல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான்எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்:இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜாநீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின்மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால்தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி)நூல்:திர்மிதீ, அபூதாவூது

ஒஸாமாவின் உடலைத் தேடும் பணியில் அமெரிக்கர்

கடந்த மே 2 அன்று ஒஸாமா பின் லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் கமாண்டோக்கள் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் சுட்டுக் கொன்றதாகவும் பின்னர் ஒஸாமாவின் உடலை கடலில் அடக்கம் செய்து விட்டதாகவும் அமெரிக்க ராணுவம் அறிவித்தது.

ஆனால் ஒஸாமா கடலில் அடக்கம் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆதாரங்கள் எதையும் அமெரிக்கா வெளியிடவில்லை. அனைத்து சோதனைகளையும் முடிந்த பின்னர் வடக்கு அரபிக்கடல் பகுதியில் முஸ்லிம் மத சடங்குகள் செய்யப்பட்ட பிறகு அதிக எடையுள்ள ஒரு பையில் வைத்து ஒஸாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஒஸாமாவின் உடலைக் கண்டு பிடிப்பதற்காக முன்வந்துள்ளார் பில் வாரன் என்ற அமெரிக்கர். இவர் கலிபோர்னியாவைச் சார்ந்தவர். கடலில் புதையலைக் கண்டுபிடிப்பதற்காகவும் மூழ்கிய கப்பல்களைக் கண்டு பிடிப்பதற்காகவும் உள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தத் தொழிலை இவர் 1972 முதல் செய்து வருகிறார். ஒபாமா அரசை தான் நம்பவில்லை என்றும் அதனால்தான் பின்லேடன் உடலைத் தேடும் பணியில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிநவீன சாதனங்கள் உதவியுடன் இந்தப் பணியை செய்யவிருப்பதாகவும் இதற்கு ஏறத்தாழ 400,000 டாலர் செலவிட இருப்பதாகவும் பில் வாரன் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு அமெரிக்க தேசபக்தன் என்பதால் ஒஸாமாவின் உடலைக் கண்டறிந்து உலகுக்குக் காட்டி உண்மையை உணர்த்த இருப்பதாக சொல்கிறார் 59 வயதாகும் வாரன். ரஷ்யாவைச் சார்ந்த தனது நண்பி ஒருவர் ரஷ்யாவில் உள்ள உயர்நிலை காவல் அதிகாரிகள் ஒஸாமா கொல்லப்பட்டதை நம்பவில்லை என சொன்னதுதான் தனது இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்புகளில் பாகிஸ்தானில் 34 பேர் பலி; 90 பேர் காயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வட மேற்கு நகரான பெஷாவரிலுள்ள சந்தைப் பகுதியொன்றில் இடம்பெற்ற இருகுண்டு வெடிப்புகளில் 34 பேர் கொல்லப்பட்டதுடன் 90 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பெஷாவரில் அரசியல் மற்றும் இராணுவ அலுவலகங்கள் அமைந்திருக்கும் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

முதலாவது குண்டுவெடிப்பு சிறியளவிலேயே இடம்பெற்றபோதும் அதற்குச் சில நிமிடங்களில் வெடித்த இரண்டாவது குண்டு பாரியதாக இருந்ததாகவும் இதிலேயே அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வாகனமொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டாவது குண்டு தூர இருந்து இயக்கும் கருவி மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இக்குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையில் அரசியல் அலுவலகங்கள், பல பத்திரிகை நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் படைமுகாம் என்பன அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இப் பகுதியில் பிரசித்திபெற்ற உணவகங்கள் மற்றும் கடைகள் என்பன உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் அல்ஹைடா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதிலிருந்து பாகிஸ்தானில் போராளிகளின் தாக்குதல் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பி.பி.சி நன்றி

ரஹ்மான் லஞ்சம் கொடுத்து விருது பெறவில்லை-ஆஸ்கர் குழு பதில்

வாஷிங்டன்: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்கவில்லை என்று ஆஸ்கர் குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கினார். ஆனால் அவர் அதை பணம் கொடுத்து வாங்கியதாக இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை ஆஸ்கர் குழு மறுத்துள்ளது.

இது குறித்து அந்த குழு கூறியதாவது,

ஆஸ்கர் விருதுக்கு தவறான நபரை குழு தேர்ந்தெடு்த்துள்ளது என்று ஒருவர் குறை கூறுவது புதிதல்ல. ஆனால் ஒருவர் தவறான வழியில் விருதை வாங்கியுள்ளார் என்று கூறுவது ஆதாரமற்றது, நம்ப முடியாதது.

எங்களுக்கு இஸ்மாயில் தர்பார் பற்றி தெரியாது. அவர் எந்த ஆதாரத்தை வைத்து ரஹ்மான் லஞ்சம் கொடுத்து விருதை வாங்கியதாகக் கூறுகிறார் என்று தெரியவில்லை என்று அகாடமி பத்திரிக்கையாளர் டெனி மெலிடோனியன் தெரிவித்தார்.

கடந்த வாரம் இந்த குற்றச்சாட்டு எழுந்தபோது அதை கேலியான விஷயம் என்று எடுத்துக் கொண்டதால் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என்றார்.

இது குறித்து ஆஸ்கர் குழு வேலும் கூறுகையில்,

வாக்கெடுப்பு முறையில் தான் விருது வழங்கப்படுகிறது. அகாடம் அதிகாரி யாராவது குளறுபடி செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட முடியாத அளவுக்கு பாதுகாப்பாகத் தான் நடத்தப்படுகிறது.

பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் அலுவலகம் தான் இசை பிரிவுக்கான வாக்கெடுப்பைக் கவனித்து வருகிறது என்று தர்பாருக்கு தெரியாது.

விருது பெறுபவர்களின் பெயர்கள் இருக்கும் கவர்களை 2 அதிகாரிகள் தயார் செய்வார்கள். மேடையில் அந்த கவர்களைத் திறக்கும் வரை அது அவர்கள் பாதுகாப்பில் தான் இருக்கும் என்று கூறியுள்ளது.

இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் கூறிய குற்றச்சாட்டு,

கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன்.

உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் திறமை உள்ளவர் என்றால் ரோஜா அல்லது பம்பாய் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியதுதானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும், என்றார்.

போராட்டமா, நாடகமா?

இந்த வாரம் பரபரப்பாக முடிந்திருக்கிறது. ராம்லீலா மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரைத் திரட்டி பாபா ராம்தேவ் தனது பலத்தை நிரூபித்தார்.

கறுப்புப் பணத்துக்கு எதிராக ஆவேசமான போரைத் தொடங்கிய அவர் கடைசியில் பெண்களுக்கும் முதியவர்களுக்கும் பின்னால் ஒளிந்து கொண்டார். நம்பி வந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடினார்.

பெண்கள் உடுத்தும் ஆடையில் இருந்த அவரை போலீஸôர் மடக்கிப்பிடித்து தில்லிக்கு வெளியே ஹரித்வாரில் கொண்டுபோய் விட்டனர். அங்கிருந்து உத்தரப் பிரதேசத்துக்குள் நுழைய முயன்ற அவரை மாயாவதி அரசு தடுத்து நிறுத்தியது.

இதனால் முஸôபர்பூருக்குச் செல்லும் அவரது திட்டம் முறியடிக்கப்பட்டது. இவரைக் குறிவைத்தே ஆங்காங்கே 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

பீதியில் ஓடி ஒளிந்த ராம்தேவ் இப்போது ஆயுதமேந்திப் போராடுவோம் என்று நம்மை மிரட்டியிருக்கிறார். ஆண்களும் பெண்களுமாக 11 ஆயிரம் பேருக்கு அவர் ஆயுதப் பயிற்சி அளிக்கப் போகிறாராம்.

யோகா குருவாக அறியப்பட்டவர் இப்போது தனது பாதையை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிந்துவிட்டது. இப்படிப்பட்டவருக்குத்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறது. அதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், பாஜகவும் இவரை ஆதரிப்பது துரதிருஷ்டவசமானது.

ராம்தேவுக்கு ஆதரவளிப்பதால் ஆர்எஸ்எஸýம் விஎச்பியும் இழக்கப்போவது எதுவுமில்லை. ஆனால், ராம்தேவின் போராட்டத்துக்குக் கைகொடுப்பதற்கு முன்னால் பாஜக நிறைய யோசித்திருக்க வேண்டும். பரபரப்புக்காக விதிகளை மீறிக் கொண்டிருக்கும் ராம்தேவிடமிருந்து விலகியிருப்பதே பாஜகவின் அரசியல் வருங்காலத்துக்கு நல்லது.

காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசும் நடந்துகொண்டது பாஜகவைவிடவும் மோசம். போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தவுடன் ராம்தேவை விமானநிலையத்துக்கே சென்று மத்திய அமைச்சர்கள் சந்தித்தது கேலிக்கூத்து. ஏற்றுக்கொள்ள முடியாதது.

அந்த சர்ச்சை ஓய்வதற்குள், ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்தவர்கள் மீது நள்ளிரவில் தடியடி நடத்தியது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலாகிவிட்டது. அரசு ஏதோ ஒரு தவறை மறைப்பதற்காக இன்னொரு தவறைச் செய்து, அது ராம்தேவுக்கு மக்கள் மத்தியில் ஒருவிதமான அனுதாப ஆதரவை உருவாக்கியது.

நல்ல வேளையாக ஆயுதப் போராட்டம் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்ததால் அந்த அனுதாப அலை மாயமாகிப்போயிருக்கிறது.

யோகா குரு முதலில் தனது போராட்டத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். கறுப்புப் பணத்தை எதிர்த்துப் போராடுகிறாரா? சரி. அப்படியானால் ஆயிரம் ஏக்கரில் ஆசிரமமும் 34 நிறுவனங்களும், ஓர் ஊடகமும், ரியல் எஸ்டேட் தொழிலும் வைத்திருக்கும் இவரிடம் இருப்பதெல்லாம் வெள்ளைப் பணம்தானா? அதை யார் விளக்குவது?

தன்னிடம் கறுப்புப் பணமே இல்லை என்பதை நிரூபித்துவிட்டு ராம்தேவ் போராட்டம் நடத்தினால்தான் நியாயமாக இருக்கும்.

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக சமூகத்தில் அனைத்துப் பிரிவினருமே போராடி வருகின்றனர். புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், கட்டுமான வல்லுநர்கள், சூப்பர் ஸ்டார்கள், சினிமா தயாரிப்பார்கள், இயக்குநர்கள், ஓவியர்கள், பெருமுதலாளிகள் என எல்லோருமே இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கிறார்கள். அவ்வளவு ஏன்? நாம் யாரைக் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறோமோ அந்த அரசியல்வாதிகளேகூட கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்று முழங்குகிறார்கள். ஆனால், இவர்களெல்லாம் வருமான வரியை முறையாகச் செலுத்துகிறார்களா என்று தெரியவில்லை.

ஒருவேளை வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றுதானே போராடுகிறோம், உள்நாட்டுக் கறுப்புப் பணம் இந்தக் கணக்கில் வராது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ?

அப்படி என்னதான் இரண்டுக்கும் வித்தியாசம் என்று அவர்களைத்தான் கேட்க வேண்டும். அப்படி ஏதாவது வித்தியாசம் இருந்தால், வெளிநாட்டு வங்கிகளில் வட்டியில்லாமல் பணத்தை முடக்குவதற்குப் பதிலாக, உள்நாட்டிலேயே கணிசமான வட்டியுடன் கறுப்புப் பணத்தைச் சேமிக்கலாம் என்று பலர் முடிவு செய்துவிடுவார்கள்.

கறுப்புப் பணப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் உலக நாடுகள் அனைத்தும் தார்மிக அடிப்படையில் செயல்பட வேண்டும். அப்படியில்லாமல் லாபம் கருதிச் செயல்பட்டால் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாது.

எந்த வங்கியும் தாமாக முன்வந்து கறுப்புப் பணம் தொடர்பான பட்டியலைத் தரப்போவதில்லை. வங்கியின் கம்ப்யூட்டர்களில் புகுந்து திருடினாலோ, குப்பைத்தொட்டியில் கிழித்துப்போட்ட காகிதங்களைத் துருவினாலோதான் கறுப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலைப் பெறுவது சாத்தியம்.

இந்த விஷயத்தில் விக்கிலீக்ஸýக்கு என்ன ஆயிற்று? ஏற்கெனவே பல விஐபிகளின் பட்டியலை வைத்திருப்பதாகக் கூறிய ஜூலியன் அசாஞ்சே இன்னும் மெüனமாக இருப்பதன் மர்மம் புரியவில்லை.

உண்மையில் கறுப்புப் பண விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான தீர்வைக் காண வேண்டுமானால் உலக அளவிலான நடவடிக்கைகளைச் செயல்படுத்தலாம்.

கறுப்புப் பணத்தைக் குவிப்பதற்குத் துணைபோகும் நாடுகளுடன் அரசுமுறை உறவுகளைத் துண்டிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை உலக அமைப்புகள் பரிந்துரைக்கலாம். இவையெல்லாம் கறுப்புப் பணம் குவிக்கப்படுவதை ஓரளவு தடுக்கும். அப்படியில்லாமல் கறுப்புப் பணம் வைத்திருப்போரும், இல்லாதவரும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கூடிப் போராட்டம் நடத்துவதெல்லாம் எதற்கும் உதவாது.

சரி. ராம்தேவ் போராட்டம், அதற்குப் பிந்தைய காட்சிகளால் யாருக்கு லாபம் என்பதைப் பார்க்கலாம். இந்த விவகாரத்தால் சந்தேகமேயில்லாமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

அரசுக்கு மக்கள் மத்தியில் இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் இப்போது காணாமல் போயிருக்கிறது. அமைச்சரவை மாற்றத்தின் மூலமாக இழந்த மரியாதையை மீட்பதற்கு அரசு முயற்சிக்க வேண்டியதுதான்.

பாஜகவுக்கு எந்த லாபமும் இல்லை. அதேநேரத்தில் இதை அரசியல் பிரச்னையாக மாற்றி தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவே ராம்தேவ் முயற்சித்திருக்கிறார். அவரிடமிருந்து விலகியிருப்பதே பாஜகவுக்கு நல்லது.

ராம்தேவ் விவகாரம் முடிவதற்குள் அண்ணா ஹசாரே தனது இரண்டாவது உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஊடகங்களுக்குத் தீனிபோட்டார். ராம்தேவின் போராட்டத்தின்போது போலீஸôர் நடத்திய வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதம் இருப்பதாக அவர் அறிவித்தார்.

ஆனால், இதைவிடப் பெரிய வன்முறை உத்தரப் பிரதேசத்தின் பட்டா காலன் கிராமத்தில் போலீஸôரால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அங்குதான் சாந்தி பூஷணுக்கு பண்ணை நிலம் இருக்கிறது என்கிற செய்தியும் ஊடகங்களில் அடிபட்டது.

விவசாயிகளின் நன்மைக்காக அண்ணா ஹசாரேவும் அவரது குழுவினரும் அங்கு சென்று போராட்டம் நடத்த வேண்டியதுதானே? மாட்டார்கள்.

தாம் விரும்புவது போன்ற லோக்பால் மசோதா வர வேண்டும் என்று அண்ணா ஹசாரே நினைக்கிறார். லோக்பால் மசோதா வரும், ஆனால் ஹசாரேயின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டதாக அது இருக்காது. எல்லோரும் ஒப்புக்கொள்வதாக அது இருக்கும். துப்பாக்கி முனையில் எந்த அரசையும் நடத்த முடியாது. இதை ஹசாரேயும் மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

நடப்பதையெல்லாம் பார்த்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. முறையான ஆட்சியைத் தராவிட்டால் 2014-ம் ஆண்டுக்கு வெகுமுன்பே தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை காங்கிரஸ் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

காலம் மாறிக்கொண்டிருக்கிறது. பிராந்திய அரசியல் தலைவர்கள் செல்வாக்குப் பெற்று வருகிறார்கள். காங்கிரஸிலும் பாஜகவிலும் பெருந் தலைகளாகக் கருதப்பட்டவர்கள் நம்பகத்தன்மையை இழந்து வருகிறார்கள். பொறுப்பை உணர்ந்து செயல்படாவிட்டால் அவர்களுக்கு அரசியல் எதிர்காலமே கிடையாது.

தேசிய அரசியலை வழிநடத்த புதிய தலைவர்கள் வேண்டும். அந்த வகையில், ராகுல் காந்தி சொல்லும் பாதையில் செல்வதே காங்கிரஸýக்கு உகந்தது. பாஜகவுக்கு வழிகாட்ட நரேந்திர மோடி இருக்கிறார். இரு கட்சிகளுக்குமே மாற்றம் தேவைப்படுகிறது. காலமும் கரைந்து கொண்டிருக்கிறது.

இலவச கலர் டி.வி. திட்டம் ரத்து: முதல்வர் ஜெயலலிதா

சென்னை, ஜூன் 10: இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை எனவும், திமுக ஆட்சியின் போது 7.48 லட்சம் டி.வி.க்களை கொள்முதல் செய்வதற்காக பிறக்கப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கொள்முதல் செய்து வைத்துள்ள 1.27 லட்சம் டி.வி.க்கள் அனாதை இல்லங்கள், அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை அளித்த பதில்:

2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 42 லட்சம். அதில் கிட்டத்தட்ட 56 லட்சம் குடும்பங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளை வைத்திருந்தவர்கள். ஆனால், 1 கோடியே 64 லட்சம் டி.வி.க்களை வழங்கியுள்ளதாக திமுக அரசு கூறுகிறது. தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள் யார் என்ற முழுமையான கணக்கையே முந்தைய அரசு எடுக்கவில்லை.

கடந்த ஜனவரி மாதம் முந்தைய திமுக அரசால் ஆறாம் கட்டமாக 10 லட்சம் டி.வி.க்களை கொள்முதல் செய்ய உத்தரவு வழங்கப்பட்டது.

அவற்றில் இதுவரை கொள்முதல் செய்யப்படாத சுமார் 7 லட்சத்து 48 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படாத நிலையில் உள்ள 1 லட்சத்து 27 ஆயிரம் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனாதை இல்லங்கள், அரசு பள்ளிகள், ஊராட்சிகள், அரசு மருத்துவமனைகள், சுகாதார துணை மையங்கள், அங்கன்வாடி மையங்கள் போன்ற அமைப்புகளுக்கு வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: திமுக அரசால் அமல்படுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நோயாளிகள் அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும் அதில் சேர்க்கப்படாத இனங்களுக்கான கட்டணங்களை தனியார் மருத்துவமனைகள் பயனாளிகளிடம் இருந்தே பெற்றன.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்துக்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.850 கோடி. அதில் அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்ட தொகை வெறும் ரூ.10.49 கோடி. மீதமுள்ளவை தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளன. இந்தக் காப்பீட்டுத் திட்டம் தனியார் மருத்துவமனைகள் அதிகம் வளர்ச்சி அடையவே பயன்பட்டன.

எனவே, இந்தத் திட்டத்தை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக் கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் தேவையான மருத்துவ வசதி பெறுவதை அரசு உறுதி செய்யும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

உண்ணாவிரதப் புரட்சிகளும் ஷர்மிளா சானுவும்!

ஜனநாயக ஆட்சியதிகாரத்தில் ஆயுதமேந்திப் போராடும் போராட்டங்களைவிட உண்ணாவிரதப் போராட்டங்களே அரசுக்கு எதிரான வீரியமான போராட்டமாக இந்தியாவில் கட்டமைக்கப் பட்டுள்ளது. இத்தகைய சத்யாகிரகப் போராட்டங்களே வெற்றியைத் தரும் என்றதொரு மாயையும் மக்களிடையே ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மை நிலை என்ன?

அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் காதுகளில் ஏழைகள் மற்றும் பலவீனர்களின் குரல்கள் எப்போதுமே விழுவதில்லை. அது சத்யாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி உண்ணாவிரதப் போராட்டங்களாக இருந்தாலும் சரி! அதே சமயம் வெள்ளையும் சொள்ளையுமாக மேல் தட்டினரிடையே வலம் வரும் கோடிகளுக்கு அதிபதிகளானோர் வாயைத் திறந்தாலே அரசுகள் நடுங்குகின்றன. டாட்டாக்களும் அம்பானி, பிர்லாக்களும்தான் உண்மையில் நாட்டை ஆளுகின்றனர் என்ற காம்ரேட்டுகளின் நீண்டக்கால குற்றச்சாட்டுகளை நினைவில் நிறுத்துவது அவசியம்.

இதற்கான சமீபத்திய மிகப் பெரிய உதாரணங்களாக ஊழலுக்கு எதிராக திடீரென குரல் எழுப்பிய, தம் ட்ரஸ்ட் மீதே ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ள அன்னா ஹஸாரேவும் 1200 கோடிக்கும் மேலாக சொத்துக்களையுடைய நட்சத்திர உண்ணாவிரதப் போராட்ட நாயகனான பாபா ராம் தேவும் விளங்குகின்றனர்.


ஊழலுக்கு எதிராக இவர்கள் களம் கண்ட ஒரு வார காலத்துக்குள் நாட்டில் நடக்கும் அமளித்துமளி என்ன! மத்திய அமைச்சர்களே வரிசையில் நின்று இவர்களிடம் சமாதானம் பேசுவதென்ன! அவர்களின் முன்னும் பின்னும் தொலைக்காட்சி ஊடகங்களின் நூற்றுக்கணக்கான மின்னும் கேமிராக்களும் மைக்குகளும் வலம் வருவதென்ன! உண்ணாவிரதப் பந்தலில் அமரும் முன்னரே அவர்களின் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொண்டதாக அரசுகள் அறிவிப்பதென்ன!


இவையெல்லாம், சத்யாகிரகப் போராட்டங்களில் ஒன்றான உண்ணாவிரதப் போராட்டத்திற்குரிய சக்தி என்றும் அதற்கு அரசுகள் என்றுமே கதிகலங்கி உடனடி நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்பும் மக்களின் காதுகளில் இந்த ஊடகங்களும் அரசுகளும் நன்றாக பூச்சூடுகின்றன என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் ஏழை மற்றும் வலிமையற்றோரின் சொல் என்றுமே அம்பலமேறியதில்லை என்பதே உண்மை! இல்லையேல் கடந்த 11 ஆண்டுகளாக அரசுக்கு எதிராக, அப்பாவி மக்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறை சட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஷர்மிளாவை இந்த அரசு கண்டுகொள்ளாதது ஏன்? மின்னும் தொலைக்காட்சி கேமராக்கள் அவரைச் சுற்றி வலம் வராதது ஏன்? ஹஸாரேயும் ராம் தேவும் உண்ணா நோன்பு துவங்குவதாக அறிவித்த 24 மணி நேரத்துக்குள்ளேயே நாட்டின் மத்திய தர வர்க்கத்தில் பெரும்பாலோருக்கு மிகப் பரிச்சயமானோராக அவர்கள் மாறிவிட்ட நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஷர்மிளாவைக் குறித்து எத்தனை சதவீதம் மக்களுக்குத் தெரியும்?


தெரியாதோர் இப்போது தெரிந்து கொள்வதற்காக ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்த தகவல் இதோ:


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் (AFSPA) அமல்படுத்தப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இச்சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரி கடந்த 11 ஆண்டுகளாக ஐரோம் ஷர்மிளா சானு என்ற சமூக சேவகி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

மணிப்பூரின் சில பகுதிகளில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தின்கீழ், சந்தேகப்படும் எவரையும் எவ்வித விசாரணையோ ஆதாரமோ இன்றிச் சுட்டுப் பிடிக்கவோ அல்லது கைது செய்து சிறையில் அடைக்கவோ முடியும். இதனால் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களால் பாதிக்கப்படும் அப்பாவிகள்கூட தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆங்கிலேயனின் அடக்குமுறை ஆட்சியினைவிடவும் கேவலமான அடக்குமுறை கொண்ட இந்தக் காட்டுமிராண்டிச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரியே ஐரோன் ஷர்மிளா கடந்த 11 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

குளுகுளு ஏசி, மினரல் வாட்டர், விலையுயர்ந்த கம்பளம், நூற்றுக்கணக்கான மின் விசிறிகள் முதலான சர்வ வசதிகளும் கொண்ட ஐந்து நட்சத்திர அந்தஸ்துடன்கூடிய பந்தலில் உண்ணாவிரதமிருந்த ராம்தேவ், தற்போது ஊடகங்களுக்கு நன்றாக தீனிபோட்டு வருவதால் பிரதமர் முதல் காபினட் அமைச்சர்கள்வரை அவர்மீது அக்கரை செலுத்தி, அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர்.

அன்னா ஹசாரே என்ற காந்தியவாதிக்கு இணையாக தன்னைக் காட்டிக்கொண்டுள்ள, ஆயிரத்தின் மடங்கு காசை வீசுவோருக்கு யோகா சொல்லிக்கொடுக்கும் ராம்தேவின் ஓரிரு நாட்கள் உண்ணாவிரதம் அரசியல் மட்டங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் கருப்புப் பணத்திற்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் பாபா ராம்தேவ், முறையற்ற வகையில் திரட்டிய சொத்துக்களின் மதிப்பு ரூ.1200 கோடிக்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

விவசாயிகளின் நிலத்தையே அபகரித்ததாக ஆதாரத்துடன் கூடிய வழக்கும் இவரின் நிறுவனத்திலேயே ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்ற பிரச்சனையும் ஏற்கெனவே நிலுவையிலிருக்கும் நிலையில்தான் ஊழலுக்கு எதிராக இக்கதாநாயகன் களமிறங்கியுள்ளது, நகைப்பின் உச்சக்கட்டம்!

வெளிநாட்டில் முதலீடு செய்துள்ள கருப்புப்பணத்தை தேசிய உடமையாக அறிவிக்க வேண்டும் என்று முழங்கும் ராம்தேவுக்கு வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. ரூ.500, ரூ.1000 காகித நாணயங்களைத் தடைசெய்யக்கோரும் ராம்தேவ் சாதாரண யோகா வகுப்புக்கு வசூலிக்கும் குறைந்த நுழைவுக் கட்டணமே ரூ.1000. அனைத்து தொழிலாளர்களுக்கும் சமச்சீரான ஊதியம் வழங்கவேண்டுமென கோரும் இக்கதாநாயகனின் நிறுவனத்தில், முறையாக ஊதியம் வழங்காததற்காகவும் ஊதிய உயர்வுக்காகவும் போராடிய தொழிலாளர்களின் வேலைக்குக் கல்தா! என்னே ஒரு சமூக உணர்வு இக்கதாநாயகனுக்கு!

ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்ட மசோதாவை நடைமுறைப் படுத்தக்கோரும் காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தொண்டு நிறுவனத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளன.


இவ்வாறு பணபலம், ஆட்பலம், அதிகார ஆதரவுடன் உண்ணாவிரதப் போராட்ட கதாநாயகர்களாக வலம் வரும் இந்த உத்தமப் புருசர்களுக்கு(!) இடையில், கடந்த 11 ஆண்டுகளாக பலமுறை கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் மூலமாகவும் டியூப் மூலமாகவும் உணவு உட்செலுத்தப்பட்டு, தன் போராட்டத்தை மழுங்கடித்து இல்லாமலாக்க முயற்சிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக சாதாரண ஒரு பெண் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விடிவு கிடைக்குமா?


இவரின் போராட்டம் கடந்த 11 ஆண்டுகளில் உலகில் பல தளங்களில் எதிரொலித்ததன் விளைவாக, கடந்த 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில் 5 நபர்கள் கொண்ட கமிசனை மத்திய அரசு அமைத்தது. இந்தக் கமிட்டி, ஷர்மிளா சானுவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக, "குறிப்பிட்ட சட்டத்தில் வரம்புமீறல்கள் நடந்துள்ளதாகவும் அச்சட்டம் நீக்கப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்" என அறிக்கை சமர்ப்பித்தது.

எப்போதும் போல், எல்லா கமிசன்களையும் போல் இக்கமிசன் அறிக்கையினையும் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, கார்ப்பரேட் போராட்டக்காரர்களான ராம்தேவ்களின் பின்னால் அரசியல்வாதிகள் சுற்றி வருகின்ற அயோக்கியத்தனம் ஊடகக் காமிராக்களின் ஆசியுடன் சிறப்பாக இங்கு அரங்கேறுகிறது.


அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும்(!) கார்ப்பரேட் சாமியார் ராம் தேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும்(!) அமைக்கத் தோன்றாத கமிசன் ஷர்மிளாவின் 11 ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் போடப்பட்டதன் மர்மம் என்ன?


விடை மிகத் தெளிவு!


ஹஸாரேயும் ராம் தேவும் கையிலெடுத்தது, நடுத்தர-ஏழை மக்களிடம் அரசின் இமேஜை நிமிடத்தில் தகர்க்க வைக்கும் ஊழல் விஷயம். இவர்களின் உண்ணாவிரதத்தைத் தொடரவிட்டால், அரசியல்வாதிகளின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும். அதற்கு ஒப்பவே, ஊடகங்களும் நடுத்தர வர்க்கத்தினரிடையே இவர்களின் போராட்டத்தை மிக வேகமாக கொண்டு சேர்த்தன.


ஆனால், ஷர்மிளாவின் போராட்ட விஷயம் ஒரு குறிப்பிட்டப் பகுதி மக்களுக்கு எதிரான அடக்குமுறை, அட்டூழியத்திற்கு எதிரானதாகும். இது எவ்வகையிலும் இந்தியாவின் பிற மாநில மக்களைப் பாதிக்கப்போவதில்லை. அவ்விஷயத்தை இந்த ஊடகங்கள் கையிலெடுத்தால், அது எந்த அளவுக்கு மக்களிடம் விலைபோகும் என்பது கேள்விக்குறியே!


இதனை உணர்ந்ததாலேயே ஷர்மிளாவின் 11 ஆண்டு போராட்டத்திற்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை இந்தக் கார்ப்பரேட் போராட்டக்காரர்களுக்கு ஊடகங்களும் கொடுக்கின்றன. அதற்கே இந்த அரசுகளும் செவிசாய்க்கின்றன. எல்லாம் வியாபார மயம்!


அடக்குமுறை சட்டங்கள் மூலம் தினசரி வாழ்வு நசுக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக இந்த கார்ப்பரேட் சாமியார்களும் காந்தியவியாதிகளும் குரல் கொடுத்துப் பார்க்கட்டுமே பார்க்கலாம்!


இன்றைய காலத்தில் வீடுதோறும் உட்புகுந்துள்ள இணைய வசதியிலுள்ள சமூக தளங்களின் மூலம் தம் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கவும் நாட்டு விசேசம் நிமிடங்களில் கைகளில் வந்துசேரும் அளவுக்கு நிலைமை முன்னேறியுள்ள நிலையில், ஊழல் மற்றும் முறைகேட்டுப் பெருச்சாளிகளின் இந்த உண்ணாவிரத நாடகங்களுக்கு மத்தியில் அதற்குக் கூட்டு நிற்கும் ஊடக பாரபட்சத்திற்கு மத்தியில் 11 ஆண்டுகளாக தன் வாழ்க்கையை முதலீடாகக் கொடுத்து போராடி வரும் ஷர்மிளாவின் உண்ணா விரதப்போராட்டம் இனிமேலாவது சமூகத் தளங்களில் ஒலிக்கட்டும்!


ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்ணாவிரதம் மற்றும் அமைதியான போராட்டங்களின் மீது இப்போதும் மதிப்பும் மரியாதையும் இருந்தால், மணிப்பூரின் இரும்புப் பெண் மாண்புமிகு ஐரோன் ஷர்மிளா சானுவின் நியாயமான கோரிக்கைக்கும் கொஞ்சம் செவி சாய்த்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லட்டும்.

இதய ஆரோக்கியத்துக்கு

ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க, இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.

இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சு வலியாதான் இருக்கணும்ணு அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி. இதுல எது இருந்தாலும், அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்னு உடனே டாக்டரை பார்க்கிறது அவசியம். சிகிச்சை, உடற்பயிற்சி, இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு. அமெரிக்கால எல்லா உணவுகள்லயும் 'டிரான்ஸ்ஃபேட்'னு சொல்லப்படற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு இருக்காங்கிறதை பேக்கிங் லேபிள்ல போடணும்னு சட்டம் இருக்கு. நம்மூர்ல அப்படி எதுவும் இல்லாதது பெரிய குறை.

எதை சாப்பிடலாம், எது கூடாதுங்கிற விழிப்புணர்வு இல்லாம, கண்டதையும் சாப்பிட்டு நோய்களை விலை கொடுத்து வரவழைச்சுக்கறோம். சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும். அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம்னு சொல்ல இது இன்னொரு காரணம்.

இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:

மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும்.

ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது.

பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.

'ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும், வேற எதுவும் வேணாம்'னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.

சாப்பிடக்கூடிய உணவுகள்:

கீரை, முழு தானியங்கள், காய்கறிகள்,

அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது)

ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.

தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடம்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்திய விமானப்படை பணிக்கு ஆள் சேர்ப்பு

தேனி: இந்திய விமானப்படைக்கு, ஜூலை 18ல் ஆள் சேர்ப்பு முகாம் சென்னையில் நடக்கிறது. 

1990 ஜூலை 1 முதல் 1994 செப்டம்பர் 30 வரை பிறந்த, புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த திருமணம் ஆகாத இளைஞர்கள் பங்கேற்கலாம். குரூப் "ஒய்'(நான் டெக்னிக்கல்) பிரிவிற்கு, பிளஸ்-2 தேர்வில் அறிவியல், கலை அல்லது வணிகவியல் பாடங்களுடன் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக்குகளில், ஏதாவது ஒரு இன்ஜினியரிங் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்பில், குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். குரூப் "எக்ஸ்'(டெக்னிக்கல் டிரேட்கள்), பிளஸ்-2 தேர்வில், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவுகளில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

தாம்பரத்தில் ஜூலை 18ல் ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. காலை 6 முதல் 10 மணிக்குள் பங்கேற்க வேண்டும். 

அசல் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு ஏழு புகைப்படங்கள், விளையாட்டு உடை, இருப்பிடச்சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு

புது தில்லி, ஜூன் 10: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் திகார் சிறையில் உள்ள கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் ஆகியோர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்தனர்.

தில்லி சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கனிமொழியின் ஜாமீன் மனு திங்கள்கிழமை (ஜூன் 13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

இந் நிலையில் மூத்த வழக்கறிஞர் அல்டாப் அகமத் சிறப்பு நீதிமன்றத்துக்கு நேரில் வந்து கனிமொழி, சரத்குமார் ஆகியோருடன் ஜாமீன் மனு விவரங்கள் குறித்து சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.

சமச்சீர் கல்வி: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தமிழக அரசு மே‌ல்முறை‌யீடு

சம‌ச்‌சீ‌‌ர் க‌ல்‌வி ‌‌தி‌ட்ட‌த்தை த‌மிழக அரசு ‌நிறு‌த்த‌ி வை‌த்து‌ள்ளத‌ற்கு இடை‌க்கால தடை ‌வி‌தி‌த்து‌ள்ள செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌தீ‌ர்‌ப்பை எ‌தி‌ர்‌த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் த‌மிழக அரசு மே‌ல்முறை‌யீடு செ‌ய்ய உ‌ள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டத்தை த‌மிழக ‌நிறு‌த்‌தி வை‌த்ததை எ‌தி‌ர்‌த்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இ‌ந்த மனு‌க்க‌ளை ‌விசா‌ரி‌த்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் கொ‌ண்ட அம‌‌ர்வு, தமிழக அரசு கொண்டு வந்த சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி சட்ட திருத்தத்துக்கு நே‌‌ற்று இடைக்கால தடை விதித்தது.

நீதிபதிக‌ள் அ‌ளி‌த்த தீர்ப்பில், மாணவர்களின் நலன் கருதி பழைய கல்வி முறையை அமல்படுத்த இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது. தமிழக அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறினார். 2011-12ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையையே அமல்படுத்த வேண்டும். அதே நேரம் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ, சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தன‌ர்.

இந்தப் பிரச்சனையில் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. உய‌ர் ‌நீ‌திம‌ன்ற உத்தரவால் சமச்சீர் கல்வி முறையை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தின் இடைக்கால தடையை நீக்க கோரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் த‌மிழக அரசு மே‌ல்முறை‌யீடு செய்ய உ‌ள்ளது. ‌நீ‌திம‌ன்ற தீர்ப்பை அடுத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா ஆகியோர் நேற்‌றிரவு அவசர ஆலோசனை நடத்தினர்.

அப்போது ‌நீ‌திம‌ன்ற தடையை நீக்க கோரி உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்தை அணுகுவது பற்றி கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. உய‌ர் ‌நீ‌திம‌ன்ற உத்தரவு அரசுக்கு கிடைத்த பின்பு இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அப்போது இறுதி முடிவு எடுக்கப்படும். என்றாலும் பள்ளிகள் வருகிற 15ஆ‌ம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே உய‌ர் ‌நீ‌திம‌ன்ற உத்தரவை எதிர்த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல்முறை‌யீடு செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக ப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌சி.‌வி.ச‌ண்முக‌ம் அரசு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளுட‌ன் டெல்லி விரைந்துள்ளா‌‌ர்.

தற்போது உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு கோடை கால விடுமுறை என்றாலும் விடுமுறை கால அம‌ர்‌வி‌ல் மே‌ல்முறை‌யீடு செய்து 15‌ஆ‌ம் தேதி பள்ளி திறப்பதற்குள் நல்ல முடிவை பெற்று விடுவோம் என்று அரசு வழ‌க்க‌றிஞ‌ர் ஒருவர் தெரிவித்தா‌ர்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலில் தாய்நாட்டில் ஆறடி நிலம் கிடைக்காத எம்.எஃப்.ஹுஸைன்

புதுடெல்லி:பிறந்த மண்ணில் கால்பதிக்கவேண்டும் என்ற ஆசையை மீதம் வைத்துவிட்டு இந்தியாவின் புகழை உலக அரங்கில் ஓங்கச்செய்த ஓவியர் வர்ணங்களின் உலகிலிருந்து பிரியா விடை பெற்றார்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் நிரந்தர அச்சுறுத்தலுக்கு ஆளான எம்.எஃப்.ஹுஸைனுக்கு தாய்நாட்டில் திரும்பிவரவேண்டும் என்ற ஆசை இறுதியில் நிறைவேறாமல் போனது.

ஹிந்து தெய்வங்களின் நிர்வாண ஓவியங்களை வரைந்தார் என குற்றம் சாட்டி ஹிந்துத்துவா சக்திகள் ஹுஸைனுக்கு எதிராக திரும்பினர்.

தனது ஓவியங்களை கலை உருவாக்கமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற இந்த கலைஞரின் வார்த்தைகளுக்கு ஹிந்துத்துவா சக்திகள் மதிப்பளிக்கவில்லை.

கோயில்களின் சுவர்களில் ஹிந்து தெய்வங்களின்(?) உருவங்களை நிர்வாணமாக வரைந்து வைத்திருப்பவர்கள்தாம் ஹுஸைன் வரைந்த ஓவியங்களுக்கு எதிராக படை திரட்டினர். கொலை மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்கள் மூலம் அவர்கள் எம்.எஃப்.ஹுஸைனை நிரந்தரமாக வேட்டையாடினர்.


அவருடைய ஓவியக்கண்காட்சிகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் வழக்காகின.சிவசேனா, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல்களுக்கு தலைமை வகித்தன.

மஹாராஷ்ட்ராவில் பாந்தர்பூரில் பிறந்த ஹுஸைனுக்கு அவருடைய சொந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் ஓவியக்கண்காட்சி கூட நடத்த சிவசேனா அனுமதிக்கவில்லை.இந்தியாவின் பிகாஸோ என அழைக்கப்படும் எம்.எஃப்.ஹுஸைனின் பல விலைமதிக்க முடியாத ஓவியங்களை இந்த பயங்கரவாதிகள் ஓவியக்கண்காட்சிகளில் வைத்து சேதப்படுத்தினர்.

ஓவியக்கலையில் உலக பிரசித்திப்பெற்றதால் இந்தியாவின் சிவில் விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகியவற்றைப் பெற்ற முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எம்.எஃப்.ஹுஸைனுக்கு எதிராகத்தான் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர்.

இறுதியில் இந்தியாவில் ஓவியங்கள் வரைவதற்கான வாய்ப்புகள் மங்கியதை தொடர்ந்து ஹுஸைன் வெளிநாடுகளுக்கு சென்றார். பிறந்த நாட்டில் வாழமுடியாத இந்த ஓவியக்கலைஞருக்கு கத்தநாடு குடியுரிமை கெளரவித்தது.பின்னர் லண்டனிலும், கத்தரிலும் தனது வாழ்க்கையை கழித்தார் ஹுஸைன்.

சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூட இந்தியாவுக்கு திரும்பிவருவதை குறித்து தனது விருப்பத்தை வெளியிட்டார் அவர்.

ஹுஸைன் கூறினார்:எனது இதயம் எப்பொழுதும் இந்தியாவிலேயே இருக்கிறது.அது என்னுடைய நேசத்திற்குரிய தேசமாகும்.

மாபெரும் மணற் தடையை நிறுவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை


கடந்த வியாழக்கிழமை (09.06.2011) இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸாவின் கான் யூனிஸ் கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள குஸா நகர நுழைவாயிலருகே மாபெரும் மணற் தடையொன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன் போது ஆக்கிரமிப்பு இராணுவத்தின் புல்டோஸர்கள் பயன்படுத்தப்பட்டதோடு, மூன்று யுத்த தாங்கிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. மேற்படி மணற் தடையை நிர்மாணித்துக் கொண்டிருந்த தொழிலாளிகளை உள்ளூர்வாசிகள் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி அப்பகுதியையே ஒரு புகைமண்டலமாக்கியதாக ஸஃபா செய்திச் சேவை தெரிவித்துள்ளது. எதிர்பாராதவிதமாக பலஸ்தீன் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்தல், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளல், யுத்த தாங்கிகள் புடைசூழச் சென்று புல்டோஸர்களால் பலஸ்தீன் பொதுமக்களின் வீடுகள், பயிர்நிலங்களை இடித்து நிர்மூலமாக்குதல் முதலான நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் மக்களான பலஸ்தீனர்களை ஆத்திரமூட்டக்கூடிய வகையில் செயல்படுதலும், ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனம் பொறுக்கமுடியாமல் கொதித்தெழும் மக்களைக் குற்றவாளிகளாக்கிக் கைதுசெய்வதும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் வாடிக்கையாகும் என உள்ளூர் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்திய இஸ்ரேலிய அராஜகம்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை ஹஷ்ரோன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையில் உள்ள நான்கு பலஸ்தீன் பெண் கைதிகளை 'சோதனையிடல்' என்ற பெயரில் நிர்வாணமாக்கி அவமானப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பலஸ்தீன் பெண்கள் அஹ்ரார் சிறைக் கைதிகளுக்கான கற்கைகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பிடம் தமக்கு நேர்ந்த அநீதியைப் பற்றி முறையிட்டுள்ளனர்.

இப் பெண் கைதிகளில் ஒருவரிடம் கைத்தொலைபேசி ஒன்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சோதனையிடுவதாகக் கூறிய ஆக்கிரமிப்புக் காவலர்கள், பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்தியுள்ளனர். இதன்போது சம்பவ இடத்தில் 10 பெண் காவலர்கள், 5 ஆண்காவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் புலனாய்வுத் துறையினர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைசாலை ஊழியர்கள் இப் பெண்கள் நால்வரையும் தனித்தனியே நிர்வாணப்படுத்தி, 'சோதனை'யிட்டுள்ளனர். இதன்போது சர்வதேச மனித விழுமியங்களுக்கு முற்றிலும் முரணாகத் தாம் பெரிதும் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி மேற்படி பெண்கைதிகள் நால்வரும் மனங்குமுறியுள்ளனர்.

மேற்படி பெண் கைதிகளைச் சோதனையிட்ட பின் அவர்கள், தொழுகைக்கு அணியும் ஆடைகள் மட்டும் அணிவிக்கப்பட்டு அங்கிருந்த விசாரணை அறைக்குள் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கொட்டடி ஆக்கிரமிப்புச் சிறைக்காவலர்களால் அங்குலம் அங்குலமாகச் சோதனையிடப்பட்டது.

இந்தத் 'தேடுதல் வேட்டை' சுமார் 6 மணிநேரம் தொடர்ந்தது. பலஸ்தீன் பெண் கைதிகளின் சிறைக்கொட்டடி தலைகீழாகப் புரட்டப்பட்டு சோதனையிடப்பட்ட போதிலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் குற்றஞ்சாட்டியது போன்ற கைத்தொலைபேசியொன்று அங்கே காணப்படவில்லை.

தேடுதல் வேட்டை இடம்பெற்ற ஆறு மணிநேரமும் மேற்படி பலஸ்தீன் பெண்கள் நால்வரும் உண்ணவோ, தொழவோ, கழிவறைக்குச் செல்லவோ அனுமதியளிக்கப்படவில்லை என்பதும், அவர்கள் மிகக் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளமையும் மிகத் தெளிவான மனித உரிமை மீறலாகும் என அஹ்ரார் அமைப்பின் பணிப்பாளர் ஃபுவாத் அல் குஃப்பாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் பொய்யான குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆண்,பெண், சிறுவர் என்ற வேறுபாடின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் கைதிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படாமலும், தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்படாமலும் மிக நீண்ட காலம் பல்வேறு சித்திரவதைகளையும் அவமானங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமச்சீர் கல்வி ரத்து - 200 கோடி இழப்பு யாருடையது: உயர் நீதிமன்றம் கேள்வி!

சமச்சீர் கல்வி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதால் ஏற்படும் 200 கோடி இழப்பு யாருடையது என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி விடுத்துள்ளது.

சமச்சீர் கல்வியை ரத்து செய்வதாக தமிழக அரசு கூறியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

சர்ச்சைக்குரியவற்றை நீக்கி நடப்பாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கூடாதா? சமச்சீர் கல்வி நிறுத்திவைக்கும் அரசு முடிவின் உண்மையான நோக்கம் என்ன? சமச்சீர் கல்வி ரத்தால் ஏற்படும் 200 கோடி இழப்பு யாருடையது? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

சமச்சீர் கல்வியின் பாடநூல்கள் உலக தரத்துக்கு இல்லாததால் சமச்சீர் கல்வி நிறுத்தப்பட்டதாக அரசு தரப்பு வாதம் செய்தது.

இதையடுத்து சமச்சீர் வழக்கில் இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழலுக்கெதிரான இயக்கத்தை வகுப்புவாத பாசிச சக்திகளிடமிருந்து விடுவிக்க வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட்

ஊழல் போன்ற பொதுப் பிரச்சினைகளை, சந்தேகத்திர்குரிய சர்ச்சைக்குரிய நபர்கள் மற்றும் வகுப்புவாத ஃபாசிச கும்பல்கள் அவர்களின் மறைமுக செயல்திட்டத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும் இதுபோன்ற போராட்டங்களின் மூலம் கபளிகரம் செய்வதை குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா கோழிக்கோட்டில் நடைபெற்ற தேசிய செயற்குழுக்கூட்டத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சந்தேகத்திற்குரிய வகையில் சொத்துக்களை பலமடங்கு சேகரித்து குவித்து வைத்துள்ள பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிரான பேராளியாக தன்னைக்காட்டிக் கொள்வது பரிதாபத்திற்குரியது. காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தலைமையில் நடைபெற்ற வெற்றிகரமான போராட்ட்த்தை தொடர்ந்து யோகா வியாபாரியின் திடீர் வருகை ஆர்எஸ்எஸ் பாஜகவின் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதிதான்.


எனவே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் நலன்கருதி அனைத்து உனர்வுள்ள மனித உரிமை ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும், பாபா ராம்தேவ் தலைமையிலான மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் கேலிக்கூத்தான சத்தியாக்கிரகங்களை ஆதரவளிப்பதை விட்டும் விலகியிருக்க வேண்டும்.

ஆரம்பகட்ட்த்தில் ராம்தேவிடம் மத்திய அரசாங்கம் கருணைகாட்டியதும் பின்னர் வலுக்கட்டாயமாக நடுநிசியில் ராம்லீலா மைதானத்தை விட்டு வெளியேற்றியதும் தேவையற்றது.

மிக மிக உயர் மட்டத்தில் ஊழலை பிரித்துப்பார்க்க முடியாது தீர்க்கவும் முடியாது. அதற்கு பதிலாக மைய நீரோட்ட அரசியலை தூய்மைப்படுத்த காங்கிரஸ் பாஜக மற்றும் சிபிஐஎம் போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிக்காமல் மத்தியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதையே இப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வாக மீண்டும் இக்கூட்டம் நினைவுகூர்கிறது.

தமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம்: ஜெயலலிதாவிற்கு சீமான் பாராட்டு

மதுரை: தமிழினப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்றும், இலங்கை அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத் தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

சிங்கள, பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு கண்ணியமிக்க, சம உரிமையுடைய வாழ்வைப் பெறுவதற்காக கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக போராடி வரும் ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஒரு திருப்பு முனையாகும்.

இத்தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும், தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் நாம் தமிழர் கட்சி இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்த மூவர் குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைத் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத இலங்கை அரசிற்கும், அந்த அறிக்கையின் மீது ஆதரவு நிலையெடுக்காத இந்திய அரசிற்கும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானம், தமிழினத்தின் சார்பாக விடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான, ராஜதந்திர ரீதியிலான நியாயமான அழுத்தமாகும்.

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, ஈழத் தமிழினத்திற்கு எதிரான இலங்கை அரசு இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு ஆதரவுடன் இரண்டரையாண்டுக் காலத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றுள்ளது.

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே அமைத்த கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையத்தின் (Lessons Learnt and Reconciliation Commission – LLRC) முன்னின்று ஈழத்தில் நடந்த மானுடப் பேரழிவு குறித்து தனது சாட்சியத்தை அளித்த மதிப்பிற்குரிய மன்னார் மாவட்டப் பேராயர் ராயப்பு ஜோசஃப் அவர்கள், இந்தப் போருக்கு முன் இருந்த வன்னி பகுதி மக்கள் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், போர் முடிந்த பிறகு வன்னி முள்வேலி முகாம்களுக்கு வந்து சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் குறைவாக உள்ளனர் என்றும், அவர்கள் கொல்லப்பட்டோ அல்லது காணாமல்போய் உள்ளவர்களாகவோ இருக்கலாம் என்றும் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார். உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த உண்மையை இன்று வரை இலங்கை அரசு மறுக்கவில்லை.

ஆனால் இது குறித்து இலங்கை அரசிடம் இந்தியா எந்த கேள்வியும் கேட்கவில்லை. இது இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைக்கு இந்திய அரசு உடந்தையாக நின்றது என்பதற்கான மற்றொரு சான்றாகும்.

இந்திய அரசின் மெளனமே, இலங்கை அரசு திட்டமிட்டுச் செய்த மாபாதகச் செயலை இனப் படுகொலை என்று சர்வதேசம் கூற முன்வராததற்குக் காரணமாகும். எனவே தான், தமிழின அழிப்பு என்பது போர்க் குற்றம் என்ற அளவோடு நி்ற்கிறது.

இந்த நிலையில் தான் தமிழினத்திற்கு எதிராக இலங்கை அரசு போர்க்குற்றம் செய்துள்ளது என்பது நம்பகமான குற்றச்சாற்று என்று ஐ.நா.நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்தது.

அந்த அடிப்படையிலேயே, ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்கக்கோரி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனப் படுகொலைப் போர் முடிந்து வன்னி முகாம்களுக்கு வந்த சுமார் 3 லட்சம் தமிழர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தப்படவில்லை.

ஏனெனில் தமிழர்கள் வாழ்ந்த பூமியில் சிங்களர்கள் குடியேற்றம் நடைபெறுகிறது. அவர்களுடைய காணிகள் சிங்களர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களை நிரந்தரமாக ஒடுக்குவதற்கு, அவர்களின் பாரம்பரிய பூமியின் பெரும்பகுதியை இராணுவப் பகுதிகளாக (Cantonments) சிங்கள இனவெறி அரசு அறிவித்துள்ளது.

வாழ்ந்த இல்லங்கள் போரினால் சிதைக்கப்பட்டு, வாழ்க்கைக்கு ஆதாரமான காணிகள் பறிக்கப்பட்டு, பிழைக்க வழியேதுமின்றி, ஈழத் தமிழினம் சிதறடிக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசை மண்டியிடச் செய்ய வேண்டுமெனில், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பதே ஒரே வழியாகும்.

அந்த புரிந்துணர்வோடு தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது ராஜதந்திர ரீதியில் மிகச் சாமர்த்தியமான தீர்மானமாகும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்த தமிழ் மக்கள் எதை மிகவும் ஆவலாக எதிர்பார்த்தார்களோ அந்த விஷயத்தை முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சிகளின் பேராதரவோடு நிறைவேற்றியுள்ளார்.

இதற்காக தமிழினம் அவருக்கும், தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, இத் தீர்மானம் தமிழினம் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு ஒரு புத்துணர்வை தந்துள்ளது என்பதை நன்றியுடன் நாம் தமிழர் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, காணாமல் போன மீனவர்கள் 4 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்ததற்கும் நாம் தமிழர் கட்சி நன்றி கூறுகிறது.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓவியர் எம்.எஃப் ஹூசைன் லண்டனில் காலமானார்

இந்துக் கடவுள்களின் உருவங்களை நிர்வாணமாக வரைந்து சர்ச்சையில் சிக்கிய ஓவியர் எம்.எஃப் ஹூசைன் லண்டனில் காலமானார். அவருக்கு வயது 96.

லண்டனில் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி 2.30 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

பத்ம விபூஷண் பட்டம் பெற்றுள்ள ஹூசைன் கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்து கடவுள்களின் உருவங்களை நிர்வாணமாக வரைந்ததால் இந்து அமைப்புகளின் கண்டனத்துக்கு உள்ளானார். பாரத மாதாவின் படத்தையும் நிர்வாணமாக வரைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்பினர் ஹூசைனுக்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியத்தை திரும்பப் பெற்றார். பின்னர் மன்னிப்பும் கோரினார்.

இந்தியாவில் நீதிமன்ற வழக்குகளும், கொலைமிரட்டல்களும் அதிகரித்ததால் 2006-ல் நாட்டைவிட்டு வெளியேறினார். 2010-ம் ஆண்டு அவருக்கு கத்தார் குடியுரிமை வழங்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டார்.

இந்திய நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக இப்போதும் கைது வாரண்டுகள் உள்ளன.

1995-ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது. 1973-ல் பத்ம பூஷண் விருதும், 1991-ல் பத்ம விபூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 1986-ல் மாநிலங்களவை எம்பியாகவும் நியமிக்கப்பட்டார்.

ச‌ட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌ம்: தி.மு.க. புற‌க்க‌ணி‌ப்பு

பாதுகா‌ப்பு இ‌ல்லாததா‌ல் ச‌ட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌த்தை புற‌‌க்க‌ணி‌ப்பதாக ‌தி.மு.க அற‌ி‌வி‌‌வி‌த்து‌ள்ளது.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ‌தி.மு.க உறு‌ப்‌பின‌ர்க‌ள் த‌னி‌‌த்த‌னியாக உ‌ட்கார வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌‌ல் பாதுகா‌ப்பு இ‌ல்லை எ‌ன்று ‌தி.மு.க. ச‌ட்ட‌ப்பேரவை தலைவ‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

‌ஒரே இட‌த்‌தி‌ல் அரை அனும‌தி தர சபாநாயக‌ர் மறு‌‌த்து‌வி‌ட்டதாகவு‌ம் மு.க.ஸ்டா‌லி‌‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

‌தி.மு.க தலைவ‌ர் கருணா‌நி‌தியை ப‌ற்‌றி நே‌ற்று அவை‌யி‌ல் தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் ‌விம‌ர்சன‌‌ம் செ‌ய்த‌ற்கு‌ க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள மு.க.‌ஸ்டா‌லி‌ன், கருணா‌நி‌தி ப‌ற்‌‌றிய ‌விம‌ர்சன‌த்‌தி‌ற்கு ப‌தி‌ல் தர ‌தி.மு.க.வு‌க்கு அனு‌ம‌தி மறு‌‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.
இதையும் தேடு: சட்டப்பேரவை கூட்டம் திமுக முகஸ்டாலின்

கச்சத்தீவு வழக்கு‌க்கு வலுசே‌ர்‌க்கவே தீர்மானம்: ஜெயல‌லிதா

இந்திய - இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு க‌‌‌‌ச்ச‌த்‌தீவை தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தொடர்ந்த வழக்குக்கு வலுசேர்க்கும் விதமாக தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இவ்வழக்கில் சேர்த்துக்கொள்ளும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்ப‌ட்டு‌ள்ளதாக முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

த‌மிழக சட்டப்பேரவையில் இத‌‌ற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து அவர் ஆற்றிய உரை‌யி‌ல், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை, 1974, 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், அ.இ.தி.மு.க பொதுச் செயலர் என்ற முறையில் என்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தினை இன்று இப்பேரவையில் முன்மொழிகிறேன்.

இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா , இலங்கைக்கு இடையே 1974, 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஒப்பந்தங்கள், சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதாவா‌ல் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவை தீர்மானிக்கிறது.

டெல்ஃப் தீவிற்கு தெற்கே 9 மைல் தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10 மைல் தொலைவிலும் உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும், பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக, தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத இறுதியில், வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத் தீவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். இது போன்ற விழாக் காலத்தில், தொழுகை நடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்று பதிவேடுகள் தெரிவிக்கின்றன.

1972இல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929, 1933ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899இல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.

அதில், ராமே‌‌ஸ்வரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

இந்த விவரச் சுவடி வெளியிடப்பட்ட போது கருணாநிதி, முதலமை‌ச்சராக இருந்தார். அந்த விவரச் சுவடியில், கச்சத்தீவு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதில் இருந்த வரைபடத்தில் கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என காண்பிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த விவரச் சுவடிக்கு 14.6.1972ல் முகவுரை எழுதிய அப்போதைய முதலமை‌ச்சர் கருணாநிதி, அதைப் பற்றி விவரச் சுவடி தயாரித்த அதிகாரிகளிடம் எடுத்துக் கூறாமல் முகவுரை எழுதிக் கொடுத்து விட்டார். இது தான் கச்சத் தீவு மீது கருணாநிதிக்கு இருந்த பற்று.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974ஆம் ஆண்டு, முதலமை‌ச்சராக கருணாநிதி பதவி வகித்த போது, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் முதலமை‌ச்சராக இருந்த போது, கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். 15.8.1991, சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றி வைத்து கச்சத்தீவை மீட்போம் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், இது குறித்து பல முறை மத்திய அரசையும், பிரதமரையும் நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தி இருக்கிறேன். 16.9.2004 அன்று, நிரந்தரமான குத்தகை என்ற முறையில், தமிழக மீனவர்கள் கச்சத் தீவிற்குச் சென்று மீன்பிடிக்கும் உரிமையை, மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருக்கிறேன். இருப்பினும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் எந்தவித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

2006ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலையடுத்து தமிழகத்தின் முதலமை‌ச்சராக கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். மத்தியிலும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. எந்த மத்திய அரசும், மாநில தி.மு.க. அரசும், 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்ததோ, அதே அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பை வகித்தன. ஆனால், கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி, மத்தியில் தி.மு.க. தயவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை இருந்த போதும் கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையையோ அல்லது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கையையோ, அப்போதைய தி.மு.க. அரசின் முதலம‌ை‌ச்ச‌ர் கருணாநிதி எடுக்கவில்லை. கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதன் விளைவாக, இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.

1960ஆம் ஆண்டுக்கு முன்பு, 1950களில், மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்ற போது, அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதலமை‌ச்சர் பி.சி.ராய், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக, அதாவது, அன்றைய மேற்கு வங்க முதலமை‌ச்சர் பி.சி. ரா‌யி‌ன் சமயோசித நடவடிக்கை காரணமாக, பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்திருந்தால், கச்சத்தீவு இன்றும் கூட, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.

1974இல் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது குறித்து அன்றைய முதலமை‌ச்சர் கருணாநிதிக்கு தெரியும் என்றும், அதை அவர் ஏன் எதிர்க்கவில்லை என்றும், நான் பல முறை கேள்வி எழுப்பி உள்ளேன். ஆனால், கருணாநிதியோ 1974இல் ஒப்பந்தம் போடுவதற்கு முன்னால் தனக்கு இது பற்றி தெரியாது என்று தான் கூறிக்கொண்டு வருகிறார்.

23.7.1974இல் மாநிலங்களவையில் கே.ஏ.கிருஷ்ணசாமி பேசும் போது, “… I would like to get a clarification in this regard from the Hon. Minister. Just now I heard the views expressed by my Hon’ble friend, Mr. S.S. Mariswamy, D.M.K.,that on the agreement reached between the government of India and the Sri Lanka government the government of Tamil Nadu was not properly informed.

… There are two news items which appeared in the Hindu. One was on June 27. “When pressmen asked the Tamil Nadu Chief Minister Mr. Karunanidhi, for his reaction to the agreement on Kachatheevu, he said he would prefer to wait until after the details had been announced. Mr. Karunanidhi said that Foreign Secretary, Mr. Kewal Singh, had met him last week during his visit to Madras and apprised him on the situation. Mr. Kewal Singh had told him that a favourable condition existed for agreement on Kachatheevu.”

On the 29th June, the Chief Minister stated the following to the Press:-

“It was regrettable that before signing the agreement, the Centre had not invited him or any representative of the State Government for consultation. The Prime Minister had not even chosen to ascertain the views of the leaders of parliament on this vital question”, என்று தெரிவித்து, இதில் எது சரி என்று கேட்கிறார்.

இதற்கு பூபேஷ் குப்தா அவர்கள் we know it for a fact that the State was consulted என்று கூறி உள்ளார்.

இது குறித்து 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கச்சத்தீவு குறித்து கொண்டு வரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, “மத்திய அரசு உங்களோடு ஆலோசனை நடத்தியதா?” என்று ஆலடி அருணா, முன்னாள் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியை கேட்ட போது, கருணாநிதி, “அயலுறவுத் துறைச் செயலர் கேவல் சிங்கை நான் டெல்லியில் சந்தித்த போது இதைப் பற்றி அவர் என்னிடம் பேசினார். இதை ஆலோசனை என்று வைத்துக் கொண்டாலும் கூட நான் அவரிடம் சொன்னது, தமிழ் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளாது. கச்சத்தீவு இந்தியாவுக்கே தமிழகத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லி மறு நாள் பிரதமரை சந்தித்த போது, இதைப் பற்றி குறிப்பிட்டு சொன்னேன்” என்று கூறியுள்ளார். அப்போது, ஆலடி அருணா நாடாளுமன்றத்தில் ஸ்வரண் சிங் பேசியதை எடுத்து சொல்கிறார்.

“… The External Affairs Minister, Shri Swaran Singh said in the Rajya Sabha today that very detailed consultations had been held with Chief Minister of Tamil Nadu Mr. Karunanidhi by the Government of India on the issue of Kachatheevu. The consultations were held at least twice”

அதற்கு விளக்கம் அளித்து, கருணாநிதி, ஸ்வரண் சிங் மேலும் என்ன சொன்னார் என்று குறிப்பிடும் போது, “May I say, because others might pick up -

I would like to say categorically, that we had very detailed consultations with the Chief Minister Shri Karunanidhi of Tamil Nadu, not once, but at least two times.” உடனே ரபிராய் என்ற உறுப்பினர் எழுந்து, “Had he agreed?” என்று சொல்லி, தந்திரமாக தப்பித்துக் கொள்கிறார்.

தந்திரமாக தப்பித்துக் கொண்டது ஸ்வரண் சிங்கோ, மத்திய அரசோ அல்ல. கச்சத்தீவை தாரைவார்க்க துணை போன கருணாநிதி தான் தந்திரமாக தப்பித்துக் கொண்டார்.

முதலில் “கன்சல்டேஷன்” இல்லை, அதாவது ஆலோசனை கேட்கவில்லை என்று சொன்னவர், பின்னர் “கன்சென்ட்” கொடுக்கவில்லை, அதாவது ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி தப்பித்துக் கொண்டுவிட்டார். கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்கும் முன்பு, மத்திய அரசு தமிழக அரசிடம் பல முறை விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, என்பது தெரிகிறது. உண்மையிலேயே, கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது, அக்கறை இருந்திருந்தால் இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே, சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார் கருணாநிதி. சட்டமன்ற தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம், "வருத்தம் அளிக்கிறது" என்று தான் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, "எதிர்க்கிறோம்" என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை.

நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியபடி, நான் எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை நமது மீனவர்களுக்கு கிடைக்காத நிலையில், 2008 ஆம் ஆண்டு அ.இ.அ.‌தி.மு.க. பொதுச் செயலர் என்ற முறையில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த 1974 மற்றும் 1976 ஆண்டைய ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத் தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தேன். இந்த வழக்கில், மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன்.

இந்த வழக்கு 6.5.2009 அன்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக பட்டியல் இடப்பட்ட போது, மீன்வளத் துறை ஆணையரால் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒரு கருத்தாக, “… uniform stand has to be taken both by the Central and State Governments” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, மத்திய அரசும், மாநில அரசும் ஒரே நிலையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கிற்கு பத்திவாரி குறிப்புகள் வைத்து, அதற்கு ஒப்புதல் கேட்டு, 10.6.2009 அன்று அன்றைய முதலமை‌ச்சர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்தக் கோப்பினை சட்டத் துறை மூலமாக அனுப்பும்படி முதலமை‌ச்சரின் செயலாளர் 13.7.2009 அன்று திருப்பி விடுகிறார்.

சட்டத் துறை தனது குறிப்பில் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்தவித வேண்டுகோளும் வைக்கப்படவில்லை என்றும், தமிழக அரசை ஒரு proforma respondent என்ற அளவில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்து, மத்திய அரசின் எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே பின்பற்றலாமா? அல்லது நம்முடைய நிலைப்பாடு பற்றி உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா? என்பது குறித்து உரிய நேரத்தில், முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இந்தக் கருத்தை உள்ளடக்கி இந்த நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில் உள்ள தமிழக அரசின் Advocate on Record-க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றோட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தக் குறிப்பிற்கு 14.8.2009-ல் முன்னாள் முதலமை‌ச்சர் கருணாநிதி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த வழக்கிற்கான பத்திவாரி அறிக்கையில், 1974, 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஷரத்து எண். 8-ன்படி, நாடாளுமன்றத்தின் பின்னேற்பு ஆணை பெறப்படாதது; சட்டத்திற்கு சட்டத் திருத்தம் செய்யப்படாதது குறித்து வாதி எழுப்பிய வினாக்களுக்கு மத்திய அரசு தான் தெளிவுரை வழங்கிட இயலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கது என்பதே முந்தைய தி.மு.க. அரசின் நிலைப்பாடாக இருந்தது.

கச்சத்தீவை மீட்க வேண்டும்; தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று, முன்னாள் முதலமை‌ச்சர் கருணாநிதிக்கு உண்மையிலேயே, அக்கறை இருந்திருக்குமானால், என்னுடைய கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் உடனே எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. தமிழக மீனவர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க மனம் இல்லாததால் தான், மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்த பின் மாநில அரசு தாக்கல் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டார் கருணாநிதி.

1.4.2011 அன்று, 2 மாதங்களுக்கு முன், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது. அதில், 1974, 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை என்றும், என்னுடைய ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கச்சத்தீவு குறித்த வழக்கில், தமிழக மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அளிக்க வகை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இத்தீர்மானத்துக்கு ஆதரவளித்து ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களை முதலமை‌ச்ச‌ர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More